Saturday, July 14, 2012

இறைவன் ஆணா பெண்ணா?

இறைவன் என்பவன் ஆண் பெண் என்ற பாலினத்திற்கு அப்பாற்பட்டவன்.

அஃறிணை உயர்திணை என்கின்ற திணைகளுக்கும் அப்பாற்பட்டவன்.

இறைவனை அவன் என்று அவனே கூறுவது, மரியாதை நிமித்தமாகக் கூறப்படும் கால வழக்குச் சொற்கள் காரணமாகவேயன்றி வேறில்லை.

சில இடங்களில் ’அவன் கூறுகிறான்’ என்பதுபோல ஒருமையிலும் சில இடங்களில் ’நாம் கூறினோம்’ என்பது போல பன்மையிலும் இறைவன் குறிப்பிடப்படுகிறான்.

நாம் கூறினோம் என்பதை நேரடிப் பொருளாக எடுத்துக்கொண்டு, இறைவன் ஒருவன் அல்லன், பலர் என்று கூறுவது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இறைவன் ஆண்பால் என்று கூறுவதும்.

No comments:

Post a Comment