Friday, September 14, 2012

சில கதைகளும் சில கேள்விகளும் 001


கதை 1
ஒருவர் உங்களிடம் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்று உதவி கேட்டு வருகிறார். உங்களிடம் உங்கள் வீட்டைத் தவிர வேறு வீடு இல்லை. ஆனால் அவருக்கு உதவ நீங்கள் முன் வருகிறீர்கள். அவருக்கு 200,000 டாலர்களை ஐந்து வருடங்களுக்குக் கடனாகக் கொடுத்து வீடுவாங்கி பயன் படுத்திக்கொள்ளச் சொல்கிறீர்கள். அவர் தன் பெயரில் 200,000 டாலருக்கு ஒரு வீடு வாங்கி அதில் தங்கிக் கொள்கிறார். அதுபோன்ற ஒரு வீட்டில் தங்கினால் வாடகையாகத் தரவேண்டிய 2000 டாலர்களை மாதா மாதம் சேமித்து வைக்கிறார். ஐந்து வருடங்கள் கழித்து அந்த வீட்டின் மதிப்பு 500,000 டாலர்களாக உயர்ந்துவிடுகிறது.

வாடகை தொகையைச் சேமித்ததால் 120,000 டாலர்கள் கிடைக்கிறது. இப்போது அந்த வீட்டை விற்கிறார். 300,000 டாலர்கள் லாபம் கிடைக்கிறது. ஆக மொத்தம் 420,000 டாலர்கள் இவருக்கு லாபமாகக் கிடைக்கிறது.

கதை 2
இதே போலவே இன்னொருவர் உங்களிடம் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என்று கேட்டு வருகிறார். நீங்கள் உங்களிடம் உள்ள 200,000 டாலர்களைக் கொடுத்து ஒரு வீடு வாங்கி அவரை அதில் தங்க வைக்கிறீர்கள். அதற்காக அவர் மாதம் 2000 டாலர்கள் வாடகையாகத் தருகிறார். ஐந்து வருடங்கள் கழித்து அவர் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விடுகிறார். இந்த வீடு உங்களுக்குத் தேவை இல்லை என்பதால் விற்கிறீர்கள். 500,000 டாலர்கள் கிடைக்கின்றன.

வாடகை 120,000 டாலர்கள் சேர்த்து உங்களுக்கு 420,000 டாலர்கள் லாபம் கிடைக்கிறது.

இனி சில கேள்விகள்:

1. இந்த இரண்டு வழிகளில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள்? ஏன்?

2. கதை ஒன்றில் எந்த உழைப்பும் இல்லாமல் எந்த செலவும் செய்யாமல் பெற்ற 420,000 டாலர்களை உதவிபெற்றவர் உதவி செய்தவருக்குக் கொடுத்தால், உதவி செய்தவர் பெற்றுக்கொள்ள வேண்டுமா கூடாதா? ஏன்?

No comments:

Post a Comment