Friday, September 14, 2012

சாதாரண மக்களாகிய உங்களுக்கு விளங்காது

குர்ஆன், ஹதீஸ் என்று வரும்போது பதவிகளுக்கும் பணத்துக்கும் ஆசைப்படும் சிலர், அவற்றை மக்கள் மத்தியில் விளக்குவதற்குப் பதிலாக, அவை சாதாரண மக்களாகிய உங்களுக்கு விளங்காது அவ்வாறு விளங்கிக்கொள்ள நீங்கள் முயன்றால் வழிகேட்டில் நுளைந்து விடுவீர்கள் என்ற அச்சத்தை ஊட்டி அந்த மக்களையே தவறான திசைகளில் தூண்டி விடுகிறார்கள்.

யாரெல்லாம் குர்ஆன், ஹதீசுகளை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கிறார்களோ அவர்களைப் புறக்கணித்து, அடித்துத் துரத்தி விடுமாறும், அவர்களுக்கு எந்த விதத்தில் என்றாலும் பரவாயில்லை, எப்படியாவது நோவினைக் கொடுத்து, சமூகத்தில் அவர்களை மானபங்கப்படுத்தி இழிவாக்கும்படி செய்கிறார்கள். இவைகள் இதுவரை நடந்த, இன்றும் நடந்துகொண்டிருக்கும் செயல்கள்.

துருக்கியில் இருந்து செய்யத் நஸ்ரத்தீன்

No comments:

Post a Comment