Thursday, September 27, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 006

முகம்மது நபியின் முதல் மனைவியான கதீஜா ஒரு செல்வந்தர்.

அவரை மணந்த முகம்மது நபிக்கு செல்வச் செழிப்பில் குறைவிருக்கவில்லை.

மேலும் தன் வியாபாரத்தைப் பெறுக்கி தன் நாற்பதாவது வயதில் ஊரிலேயே பெரும் செல்வந்தராக ஆகிவிட்டார்.

அப்போதுதான் தனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அறிவித்தார்.

இதனால் அவர் பிறந்த ஊரையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு ஓர் அகதியைப்போல் மதினாவுக்குக் குடிபெயர வேண்டியதாயிற்று.

தான் இறைத் தூதர் என்று கூறுவதை விட்டுவிடுகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் தான் பிறந்த ஊரிலேயே செல்வச் செழிப்போடும் எதிர்ப்புகளே இல்லாத நிம்மதியோடும் சுகவாசியாக அவர் வாழ்ந்திருக்கலாம்.

No comments:

Post a Comment