ஓர் அகதியைப்போல மக்காவைவிட்டு மதினா வந்த முகம்மது நபியின் மதினா ஆட்சி வெகு சிறப்பாக நடந்துவந்தது.
பொன்மீதும் பொருள் மீதும் ஆசைப் பட்டிருந்தால் அன்று மிக எளிதாக அவற்றைத் திரட்டி இருக்க முடியும்.
அவர் பொருள் திரட்டவில்லை இறைவனின் அருள்தான் திரட்டினார்
மாட மாளிகையில் வாழவில்லை மண் குடிசையில்தான் வாழ்ந்தார்
விளக்குகளும் இல்லா அக்குடிசையிலேயே அவர் உயிர் பிரிந்தது.
இரண்டு சிறிய போர்வைகளே அவரின் ஒட்டு மொத்த ஆடைகள்.
அவர் மட்டுமல்ல அவர் குடும்பத்தினரும் வயிறார உண்டதில்லை.
பல காலம் அடுப்பு விடுப்பில் இருக்க பேரிச்சம் பழம் மட்டுமே உணவாக இருக்கும்.
தன் இரும்புக் கவசத்தை உணவுப் பொருட்களுக்காக அடமானம் வைத்து மீட்க முடியாமலேயே மரணித்தார்.
No comments:
Post a Comment