Tuesday, September 25, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 003

ஓர் நாள் முகம்மது நபி இருட்டில் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைக் கடந்து சில நபித் தோழர்கள் சென்றனர்.

அவர்களை நிறுத்தி ‘நான் என் மனைவியுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்று முகம்மது நபி கூறினார்.

தன்னைப் பற்றி மக்கள் ஒருபோதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்றாலும் முகம்மது நபி தன்மீது சந்தேகத்தின் நிழல்கூட படாமல் வாழ்ந்தார்.

யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இதுபோன்ற செயல்களில்கூட முகம்மது நபி இப்படி நடந்து கொண்டார் என்றால் பொதுக் காரியங்களில் எவ்வளவு நேர்மையுடன் நடந்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.

இதனால் தான் உலகம் அவரை மாமனிதர் முகம்மது நபி என்று அழைக்கிறது.

No comments:

Post a Comment