Wednesday, September 26, 2012

சின்னச் சின்னச் செய்திகள் 004

இறை முத்திரை

ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குக் கடிதம் அனுப்புவார். அந்தக் கடிதத்தில் தபால் நிலையம் ஒரு முத்திரையைக் குத்தும். அந்த முத்திரை முக்கியமானது. அது இல்லாவிட்டால் கடிதம் போய்ச்சேராது.

ஒரு மன்னர் இன்னொரு மன்னருக்குக் கடிதம் அனுப்புவார். அந்தக் கடிதத்தில் ராஜ முத்திரை குத்தப்படும். மதிப்பால் உயர்ந்த அந்த முத்திரை இல்லாவிட்டால் இன்னொரு மன்னரால் அந்தக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,

இறைத்தூதர் முகம்மது அவர்கள் மன்னர்களுக்குக் கடிதங்கள் அனுப்புவார். அந்தக் கடிதங்களில் இறைத்தூதரின் முத்திரை குத்தப்படும். இது ராஜ முத்திரைகளைவிட பல மடங்கு உயர்வானது.

ஆனால் இறைவன் ஒரு முத்திரை வைத்திருக்கிறான். அது எதுவென்று தெரியுமா உங்களுக்கு?

உலகில் எத்தனையோ நபிகள் வந்திருந்தபோதும் முத்திரை நபி என்று இறைவன் தன் வசனத்தில் கூறுவது முகம்மது நபியைத்தான்.

முத்திரை குத்தப்படாத எதுவும் அங்கீகரிக்கப்பட்டதாக ஆவதில்லை. குர்-ஆன் மக்களுக்காக முகம்மது நபி என்ற முத்திரையைக் குத்தி வந்த இறைவனின் செய்திகள்

No comments:

Post a Comment