Thursday, October 4, 2012

பலகீனமான குர்-ஆன் வசனம் என்று ஏதும் இல்லை

பலகீனமான ஹதீதுகள் நிறைய உள்ளன.

பலகீனமான குர்-ஆன் வசனம் என்று ஏதும் இல்லை.

குர்-ஆன் முகம்மது நபி அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு உடனுக்குடன் அப்போதே பதிவு செய்யப்பட்டு ஏராளமான மனனப் பிரதிகளும் எழுத்துப் பிரதிகளுமாய் இருந்து நபியின் காலத்திலேயே வசன வரிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டது.

கலப்படங்களைத் தவிர்ப்பதற்காக முதல் கலிபாவால் தொகுக்கப்பட்டு, மூன்றாம் கலிபாபாவல் நபி மறைந்த 16 வருடங்களுக்குள் முழுமை பெற்றுவிட்ட ஒன்று.

ஹதீதுகளின் கதை அப்படியல்ல. நபி மறைந்த 200 வருடங்கள் கழிந்து, சகாபாக்கள் மறைந்து நூற்றாண்டுகள் கழிந்து வேற்று மொழி மற்றும் வேற்று நாட்டவரால் தொகுக்கப்பட்டவை.

தொகுக்கப்பட்டவற்றுள் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளைவிட கழிக்கப் பட்டவைகளே ஏராளம் ஏராளம் ஏராளம்

அந்த சரித்திரத்தைக் கொஞ்சம் கற்று உணர்ந்தபின் கருத்தாடல்களுக்குச் சான்றுகளாகவும் ஆதாரங்களாகவும் தேவையானவற்றைப் பயன்படுத்தினால் ஓர் நல்ல திசையும் தெளிவும் கிடைக்கும்.

இறைவன் ஒருவனே பேரறிவாளன்!
ஏனையோர் யாவரும் குறையறிவாளர்களே!

No comments:

Post a Comment