Sunday, October 28, 2012

மைமி மா என்றொரு முஸ்லிம் பெண்

வியட்நாமில் புத்த மதத்தில் பிறந்த மைமி மா வியட்நாம் போர் காரணமாக நான்கு வயதிலேயே அனாதை ஆக்கப்பட்டார்.

தன் சகோதரியின் மூலம் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு ஆப்பிரிக்கா சென்றார்.

அங்கே 1980களில் பள்ளியில் பயிலும்போது முஸ்லிம் மாணவிகளின் மூலம் இஸ்லாம் மார்க்கம் பற்றி அறியும் வாய்ப்பினைப் பெற்றார்.

அதன் பின்னர், தன் சகோதரியுடன் அமெரிக்காவுக்குச் சென்றபோது, மைமி மா பதின்ம பருவத்தை அடைந்திருந்தார்.

தொடக்கத்தில், முஸ்லிம்களைப் பற்றித் தாழ்வான கருத்தைக் கொண்டிருந்த மைமி மா, ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளில் இருந்தபோது கிடைத்த உண்மையான அனுபவத்தால், முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களின் வேதமான குர்ஆனைப் பற்றியும் சரியான கருத்தைப் பெற்றார்.

தன் 18ம் வயதில் ‘இண்டியானா போர்டிங் ஸ்கூல்’ என்ற அமெரிக்கப் பள்ளியில் பயிலும்போதுதான் இஸ்லாமிய வேதத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கினார்.

பெண்ணுரிமை என்பது பிறமதங்களில் பேசப்படுகின்றது ஆனால் அது இஸ்லாத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றது என்ற உண்மையை அறிந்துகொண்டார். 1988 ஆம் ஆண்டில் இஸ்லாத்தில் இணைந்தார்.

இதனால் அவருடைய சகோதரியாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். எனவே, அமெரிக்க-இஸ்லாமியத் தொடர்பு இயக்கமான CAIR (Council of American-Islamic Relations) அலுவலகத்தை அணுகினார்.

அவர்களின் வழிகட்டலுடன், தானாகவே தனது இஸ்லாமிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, முகம்மது என்ற முஸ்லிம் கணவருடன் அமைதியாக வாழ்ந்துவருகின்றார்.

தற்போது West Palm Beach என்ற Florida மாநிலத்து நகரில் கணவருடன் வசிக்கும் மைமி மா, தலைத் துப்பட்டாவுடன் வெளியில் சென்று வரும்போது, அவரை அமெரிக்கர் என்றோ ஆசியன் என்றோ மக்கள் கருதுவதில்லை. மாறாக, அவரை அரபு நாட்டுப் பெண் என்றுதான் கருதுகின்றனராம்!

தன்னை நோக்கி விடுக்கப்படும் வினாக்களுக்குத் தகுந்த விடைகளைத் தயாராக வைத்துள்ளார் இவர். இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என்று கூறும் எவருக்கும் தகுந்த வாயாப்புக் கொடுக்கும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுள்ளார்.

குர்ஆனை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், பெண்ணுரிமை பற்றி எதிர்மறை வாக்குவாதம் செய்ய வந்தால், “திறந்து காட்டுங்கள்! எங்கே இருக்கிறது, எங்களுக்கு உரிமையில்லை என்று? சொத்துரிமை இல்லையா? கல்வி கற்கக் கூடாதா? மக்களை -குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தை- வழி நடத்துவதில் தலைமை வகிக்கக் கூடாதா? தனது பொருளாதாரத்தைப் பெண்ணொருத்தி நிர்வாகம் செய்யக் கூடாதா? ஆண்களுக்குள்ள உரிமைகளுள் எதனையும் பெண்கள் பெறக் கூடாதா? சொல்லுங்கள், பார்ப்போம்!” என்று சவால் விடும் மைமி மா, விவேகத்தின் விடியலாக விளங்குகின்றார்!

பெண்ணுரிமையே மைமி மாவின் மாற்றத்திற்குப் பிரதான காரணமாகும்.

நோக்கம் எதுவாயிருந்தாலும், மத மாற்றத்தின் பின் சொந்த-பந்தங்களால் ஒதுக்கப்படுவது உறுதி. அதுதான் மத மாற்றத்தின் மிகப் பெரிய பாதிப்பு என்கிறார் மைமி மா.

“எனினும், எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி நான் எடுத்த முடிவுக்கு முன்பாக, உறவு முறைகளால் ஒதுக்கப்பட்ட நிலை எம்மாத்திரம்? அது அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை!” என்கிறார்.

“ரமளான் ஒரு சுய பரிசோதனைக்கான வாய்ப்பு. ஓர் ஆன்மீகப் பயிற்சிக் கூடம். இம்மாதத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்புக் கடமையை நிறைவேற்றுகின்றனர் எனும்போது, நம்மையும் அறியாமல், இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் ஓர் ஆன்மீக ஆறுதலும் கிட்டுகின்றது.

பகல் முழுதும் உண்ணாமல், பருகாமலிருந்து, இரவின் தொடக்கத்தில் இன்பத்தோடு நோன்பைத் துறக்கும் அந்த மகிழ்ச்சி, இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது!” என்கிறார் மைமி மா.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிவதும், குறிப்பாக ஏழைகளை மகிழ்விப்பதும், வாழ்க்கையின் முக்கியச் செயல்பாடுகளைப் பற்றித் திட்டமிடுவதும் இந்த மாதத்தில் மைமி மாவைக் கவர்ந்தவையாகும்.

நன்றி:
http://www.usislam.org/converts/elizabeth.htm
http://adirainirubar.blogspot.in/2012/10/17.html#comment-form

No comments:

Post a Comment