Sunday, October 21, 2012

ஒரு ஹதீதை எப்படி அணுகவேண்டும்?

ஒரு ஹதீதை நாம் அறிவைக்கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்லுகிறார்கள் சிலர்.

ஆனால் குர்-ஆனை நீங்கள் அறிவைக் கொண்டு பார்க்கலாம்.

இஸ்லாம் அறிவியல் பூர்வமான ஓர் மார்க்கம். அதனுள் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை.

மூடநம்பிக்கைகளே இல்லாத அற்புதமான மார்க்கம் என்ற பெருமையை உடையது இஸ்லாம்.

உலகின் தலை சிறந்த அறிஞர்கள்கூட (அறிஞர் பெர்னாட்சா போல) குர்-ஆனை வாசித்துத்தான் இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்று சொன்னார்கள்.

குர்-ஆன் அப்படிப்பட்ட ஓர் புனித நூல், புரட்சி நூல், உண்மையின் மையம்.

பலகீனமான ஹதீதுகளை ஏற்றுக்கொள்வதால் நீங்கள் இஸ்லாத்தின் உயர்வுக்கு பங்கம் விளைவிக்கிறீர்கள்.

பலகீனமான ஹதீதுகள் உண்டு.

பலகீனமான இறைவசனம் ஏதேனும் ஒன்று உண்டா?

குர்-ஆன் அப்படியே உண்மையின் இழைகளால் கட்டப்பட்டது.

ஹதீதுகள் பொய்யர்கள் சூழ்ந்து செய்த சதியால் கலப்படம் செய்யப்பட்டது.

ஹதீதுகளில் பலகீனமானவற்றைக் களைவது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமை.

அன்று இயன்றவரை அறிஞர்கள் களைந்தார்கள்.

ஹதீதுகளைப் பார்வை இட்டு ஆயிரம் ஹதீதுகளுக்கு ஒன்றிரண்டைத்தான் ஏற்புடையது என்றார்கள்.

குர்-ஆனில் ஏதேனும் ஒரு இறைவசனத்தை உங்களால் நீக்க முடியுமா?

அப்படி ஓர் குழு அமைக்கப்பட்டு குர்-ஆன் வசனங்கள் ஏதேனும் நீக்கப்பட்டதா?

ஏற்புடைய ஹதீதுகள் என்று பல லட்சம் ஹதீகளில் இருந்து சில வற்றை மட்டுமே தொகுத்தார்கள். ஏன் என்று சிந்திக்கவேண்டும்.

ஏற்புடைய குர்-ஆன் வசனம் என்று பல ஆயிரம் இறைவசனங்களை நீக்கி சிலவற்றை மட்டும் தேர்வு செய்து எந்த அறிஞர் குழுவாவது தொகுத்ததா?

ஒரு சொல்லும் ஓர் எழுத்தும் மாற்றாமல் நபித் தோழர்களின் நினைவாற்றல்களிலிருந்தும், எழுதி வைக்கப்பட்ட அனைத்து வகை ஏடுகளிலிருந்தும் குர்-ஆனை நூலாக்கினார்கள்.

ஹதீதுகள் அப்படியா?

ஹதீதுகளின் வரலாற்றை வாசியுங்கள்
http://anbudanislam2012.blogspot.ca/2012/10/blog-post_3595.html

அறிவுடைய ஒவ்வொருவருக்கும்
மேலான அறிவுடைய ஒருவன்
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)

No comments:

Post a Comment