Saturday, October 20, 2012

குர்-ஆன் எளிமையானது குர்-ஆனைப் பின்பற்றுங்கள்

43:2. விளக்கமான
இவ்வேதத்தின் மீது சத்தியமாக.

54:17. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு
நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே
எளிதாக்கி வைத்திருக்கின்றோம்.
எனவே நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

54:22. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு
நினைவு படுத்திக் கொளளும் பொருட்டே
எளிதாக்கி வைத்திருக்கின்றோம்;
எனவே நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

6:126. (நபியே!)
இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும்
சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை
நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்

47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை
ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்கள் இருதயங்கள் மீது
பூட்டுப்போடப்பட்டு விட்டனவா?

8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்
உயிர்ப் பிராணிகளில்
மிக்க கேவலமானவர்கள்
(உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும்
ஊமைகளும் தாம்.

6:106. (நபியே!)
உம்முடைய இறைவனிடமிருந்து
உமக்கு செய்தி மூலம்
அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக 
அவனைத் தவிர  இறைவன் வேறில்லை
இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்

6:104. நிச்சயமாக உங்களுக்கு
உங்கள் இறைவனிடமிருந்து
ஆதாரங்கள் வந்துள்ளன
எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ
அது அவருக்கே நன்மையாகும்,
எவர் பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ
அது அவருக்கே கேடாகும்
“நான் உங்களைக் காப்பவன் அல்ல”
(என்று நபியே! நீர் கூறும்).

18:27. இன்னும் (நபியே!)
உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து
உமக்கு செய்தி மூலம் அருளப்பட்டதை
நீர் ஓதி வருவீராக 
அவனுடைய வார்த்தைகளை
மாற்றக் கூடியவர் எவருமில்லை;
இன்னும் அவனையன்றி
புகலிடம்எதையும் நீர் காணமாட்டீர்.

6:115. மேலும்
உம்முடைய இறைவனின் வார்த்தை
உண்மையாலும் நியாயத்தாலும்
முழுமையாகி விட்டது 
அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர்
எவரும் இல்லை 
அவன் (அனைத்தையும்) கேட்பவனாகவும்,
அறிபவனாகவும்இருக்கின்றான்.

6:116. பூமியில்உள்ளவர்களில்
பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால்
அவர்கள் உம்மை இறைவனின் பாதையை விட்டு
வழிகெடுத்து விடுவார்கள்.
வெறும் யூகங்களைத்தான்
அவர்கள் பின்பற்றுகிறார்கள்
இன்னும் அவர்கள் கற்பனையிலேயே
மூழ்கிக்கிடக்கிறார்கள்.

7:3. (மனிதர்களே!)
உங்கள் இறைவனிடமிருந்து,
உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்;
அவனையன்றி (வேறெவரையும்)
பாதுகாவலர்களாகப் பின்பற்றாதீர்கள்
நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

20:13. இன்னும்
“நாம் உம்மை (என் தூதராக)த்
தேர்ந்தெடுத்தேன்; ஆதலால்
இறைச்செய்தி வாயிலாக (உமக்கு)
அறிவிக்கப் படுவதற்கே நீர் செவியேற்பீராக.

10:36. ஆனால், அவர்களில் பெரும்பாலோர்
யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை;
நிச்சயமாக யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக
எந்த ஒரு பயனும் தர இயலாது.
நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்பவற்றையெல்லாம்
நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

7:35. ஆதமுடைய மக்களே!
உங்களிடம் உங்களிலிருந்தே (நம்)
தூதர்கள் வந்து, என் வசனங்களை
உங்களுக்கு விளக்கினால்,
அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு
(தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ
அவர்களுக்கு அச்சமுமில்லை;
அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.

10:15. என் மீது இறைச்செய்தியாக
அறிவிக்கப்படுபவற்றைத் தவிர
வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை,
என் இறைவனுக்கு நான் மாறு செய்தால்,
மகத்தான நாளின் வேதனைக்கு
நான் நிச்சயமாக பயப்படுகிறேன்”
என்று (நபியே!) நீர் கூறுவீராக.

6:93. இறைவனின் மீது பொய்க் கற்பனை செய்பவன்,
அல்லது இறைச்செய்தி மூலம் தனக்கு
ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க,
“எனக்கு இறைச்செய்தி வந்தது” என்று கூறுபவன்;
அல்லது “இறைவன் இறக்கிவைத்ததைப் போல்
நானும் இறக்கிவைப்பேன்”  என்று கூறுபவன்,
ஆகிய இவர்களை விடப் பெரிய
அநியாயக்காரன் யார் இருக்க முடியும்?
 
எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ
அதைத் தொடர வேண்டாம்
குர்-ஆன் 17:36

அறிவுடைய ஒவ்வொருவருக்கும்
மேலான அறிவுடைய ஒருவன்
இருக்கிறான் (குர்-ஆன் 12:76)

No comments:

Post a Comment