Saturday, October 20, 2012

பெண்களின் தொழுகை வரிசையில் கெட்டது

“ஆண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புக்குரியது, அவற்றில் முதலாவதாகும். அவற்றில் கெட்டது கடைசியாகும். பெண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புடையது அவற்றில் கடைசியானதாகும். அந்த வரிசைகளில் கெட்டது முதாலவதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

முதல் வரிசையில் நிற்கும் எல்லாப் பெண்களும் கெட்டதைச் செய்யக்கூடாது என்று நினைத்தால் என்னவாகும்?

பெண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புடையது அவற்றில் கடைசியானதாகும். அந்த வரிசைகளில் கெட்டது முதாலவதாகும்”

பெண்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தொழும் வரிசைகளில் நிற்கிறார்கள்.

அதில் முதல் வரிசையில் பெண்கள் நிற்காவிட்டால் இரண்டாவது வரிசை உருவாக வழியில்லை.

இரண்டாவது வரிசை உருவாகாவிட்டால் மூன்றாவது வரிசை உருவாக வழியில்லை.

முதல் வரிசையில் நிற்பது கெட்டது என்று கூறப்பட்டுவிட்டது.

இனி எந்தப் பெண்ணும் முதல் வரிசையில் நிற்க விரும்பமாட்டாள்.

என்றால் முதல் வரிசையே உருவாகாது.

முதல் வரிசையே உருவாகாவிட்டால் இரண்டாவது வரிசை உருவாகாது.

இரண்டாவது வரிசை உருவாகாவிட்டால் மூன்று நான்கு என்று ஏதும் உருவாகாது.

அப்படியென்றால் பெண்கள் தொழுகைக்கு நிற்கவே முடியாது.

அப்படி நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அவர்கள் கெட்ட வரிசையான முதல் வரிசையில்தான் முதலில் நின்றாக வேண்டும்.

ஆகவே இந்த ஹதீது பலகீனமானது என்று கொள்ளலாம்.

ஆண்களைப் பார்ப்பதற்கென்றே தொழுகைக்கு வராதீர்கள் இறைவனைக் காண்பதற்கு வாருங்கள் என்று பெண்களையும். பெண்களைக் காண்பதற்கென்றே பள்ளிக்கு வராதீர்கள், இறைவனை வணங்க வாருங்கள் என்று ஆண்களையும் சொல்வதாக இந்த ஹதீது அமையப் பெற்றிருக்க வேண்டும்.

அந்த நல்ல எண்ணத்தோடு ஆணும் பெண்ணும் தொழ வந்தால், அவர்கள் அவரவர்களின் எந்த வரிசையில் நின்றாலும் கேடும் இல்லை சிறப்பும் இல்லை.

ஆகவே கெட்ட வரிசை என்று ஏதும் இல்லை. இறைவனைத் தொழும் வரிசைகளில் எல்லா வரிசைகளுமே நல்ல வரிசைகள்தாம்.

என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நபி பெருமானார் சிறந்த அறிவாற்றல் உள்ளவர்கள். இதுபோல் ஒன்றையும் அவர்கள் சொல்லவே மாட்டார்கள்.

இது அவர்கள் சொன்னதைக் கேட்டு தவறாக சொற்களைப் புகுத்தியோ விலக்கிய அறிவித்ததால் வந்த குறைபாடாக இருக்கலாம்.

அல்லது முதல் சுற்றில் சரியாக அறிவித்து அடுத்த சுற்றில் தவறாக அல்லது அடுத்த சுற்றிலும் சரியாக அறிவித்து அதற்கும் அடுத்த சுற்றில் பிழையாக என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

குர்-ஆனின் வசனங்களில் ஓர் எழுத்தையும் மாற்றியமைக்க முடியாது. அது அப்படி பாதுகாக்கப்பட்டு உடனே நூலாகவும் உருவாக்கப்பட்டு மூன்று நூல்கள் மூன்று நாடுகளில் பாதுகாக்கப்பட்டன.

ஹதீதுகள் அப்படி பாதுகாக்கப்பட்டவை அல்ல. ஹதீதுகளுக்குள் கலப்படங்கள் உண்டு. பிழையான வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு.

அவற்றைச் சரியாக்கிக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையாகும்.

No comments:

Post a Comment